Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக கேட்டு ஐகோர்ட்டில் ஜிகே வாசன் முறையீடு

மார்ச் 25, 2019 09:00

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் இன்று காலையில் வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். அப்போது, ஜி.கே.வாசன் தரப்பில் வக்கீல் ஒருவர் ஆஜராகி, த.மா.கா. கட்சியின் கருத்தை கேட்காமல், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு மட்டும் த.மா.காவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது சட்ட விரோதம். இதுகுறித்து தொடரப்படும் வழக்கை உடனே விசாரிக்கவேண்டும் என்றார். 

இதையடுத்து மனுதாக்கல் செய்தால், நாளை (செவ்வாய் கிழமை) விசாரிக்கப்படும் என நீதிபதிகள் பதில் அளித்தனர்.

தலைப்புச்செய்திகள்